Tuesday, January 15, 2013

ஒரு பவரு இருந்து இம்சை பண்ணுது.. இன்னோன்னு இல்லாம இம்சை பண்ணுது

      எல்லோரும் பொங்கல் சாப்டாச்சா..! ’இப்போதைக்கு தமிழ்நாட்ட போட்டு  பொறட்டி எடுத்துட்டு இருக்கிறது ரெண்டு, ரெண்டுமே ஒன்னு “பவரு..!”(கவித.. கவித..)’.
         அட இந்த ரெண்ட பத்தியும் புதுசா எதாவது சொல்லப் போறேன்னு பாக்குறீங்களா.. அட அதெல்லாம் ஒன்னும் இல்லீங்கோ..! இப்ப இந்த ஊரே ரெண்டு பட்டு கெடக்குது, பவரின் தன்னம்பிக்கைனு ஒரு கோஷ்டியும்.. அட அது ஒரு காமெடி பீஸ்னு இன்னோரு குரூப்.. இதுல பவரோட வாக்குமூலம் என்னன்னா “ சார்.. நான் எவ்லோ தான் பெரிய டாக்டரா இருந்தாலும் என்ன எத்தன பேருக்கு தெரியும்.. ஆனா இப்போ பாருங்க ஊரு உலகத்துக்கே என்ன தெரியுது..”னு, இதுல கோபிநாத்தோட நிகழ்ச்சிய நானும் பாத்தேன் (இந்த பிரச்சனைக்கு அப்பறமாத்தான்) நான் ஒன்னும் கோபி-யோட விசிரி கெடையாது.. அந்த நிகழ்சியில கோபியோட வாதம் ஒன்னும் தப்பால்லாம் இல்லீங்க.. கோபி என்ன சொல்ல வந்தாருன்னா “ எல்லோரும் பாத்து சிரிக்கிற உங்களுக்குள்ள, உண்மையாவே ஒரு திறமை இருக்கலாம் அது என்னன்னு தெரின்சுக்க விரும்புரோம்னு ” ஆனா கடைசி வரையும் பவர் காமெடிதான் பண்ணிட்டு இருந்தாப்ல..

         இதுல நாம உணர வேண்டிய விசயம் என்னன்னா பவர் சீனிவாசன் அவரோட பாதைல கிளீனா இருக்காப்ல, அவர பத்தி எல்லாரும் பேசனும் நல்லதாவோ.. கெட்டதாவோ.. ஆனா நம்மல பத்தி பேசனும் ( ஹி.. ஹி.. இங்க மட்டும் என்ன வாழுது, நானும் அத தான பண்ணிட்டு இருக்கேன் ). அத கரெக்ட்டா பயன்படுத்துனது சந்தனம் தான். 
               அதாவது ஒரு பொருள் பாப்புலாரிட்டியா இருக்குன்னா அத வச்சு சம்பாதிக்கிறது தான வியாபாரம். ஆனா நான் இத தப்பா சொல்லல.. சந்தானமும் ஒரு நல்ல வழிய (Platform) காமிச்சுருக்காப்ல.. இதவே பின்பற்றினால் நல்லபடியா ஒரு பேர உண்டாக்கிகலாம், இல்லைனா இந்த ஊர்ல தண்ணியடிச்சுட்டு கோமாளித்தனம் பண்றவன உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பாப்பானுங்கலே அந்த மாதிரிதான், சந்தானம் பாஷைல சொல்லனும்னா கடைசிவரையும் காமெடி பீசுன்னு தெரியாமலே காலத்த ஓட்ட வேண்டியதுதான், நாமளும் அதுக்கு மார்க்கெட்டிங் பண்ண வேண்டியதுதான்..!

           “ ஒரு பவரு இருந்து இம்சை பண்ணுது.. இன்னோன்னு இல்லாம இம்சை பண்ணுது” . மின்சாரம் அத்தியாவசிய தேவைகள்ள ஒன்னா மாறி பல வருசம். ஆயிடுச்சு. ஆனா தற்குறி அரசியல்வாதிகள் பண்ற கோமாளித்தனததால மக்கள் அவதிப்பட வேண்டியதா இருக்கு. ஆனா பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமான்னும் யோசிக்க வேண்டியதா இருக்கு, காலம்காலமா எந்த திட்டமிடலும் இல்லாம ரோட்ட இடிக்கிறது இன்னமும் வழக்கம் தான.. எப்பா இந்த இஞ்ஜினியர்னு மாநகராட்சி நகராட்சியில இருக்குறவங்களுக்கு என்னதான் வேல.. ஒரு தெருவுக்கு அனுமதி தரும்போதே பின்னால என்ன மாதிரியான தேவைகள் இருக்கும்னு திட்டமிடல் இல்லாம ரோட பஞ்சர் பாக்குறது.. அதோட விளைவுதான் எந்த திட்டமிடலும் இல்லாம பன்னாட்டு கம்பெனி எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்துட்டு இப்ப பல்லக் காட்டிக்கிட்டு நிக்குது பவர் கட்டு...
             அப்பவே அந்த மனுசன் சொன்னாரு சுதந்திரம் வாங்குனதுக்கு அப்புறமா காங்கிரஸ களைச்சுடலாம்னு, யாரு கேட்டா காந்தி பேச்ச.. பாகிஸ்தான்-காரன் எவ்வளவு அடிச்சாலும் , வடிவேல் மாதிரி “வேணாம் எனக்கு கோபம் வராது.. ”னு வசனம் பேசுறது.. அமெரிக்கா-காரன்ட அடகு வைக்கிரது, கால் கழுவி விட்றது இத தவிர வேற என்ன தெரியும்.. சுஷ்மா காமெடி வேற “பாகிஸ்தான்ல பத்து பேரு தலைய எடுக்கனுமாம்”. அவனுங்க என்ன ராகுல் காந்தி தலையாவா வெட்டிட்டு போனானுங்க.. அதான..!

ஏண்டா இப்பிடி..! எங்கிட்டு இருந்து இப்படி எல்லாம் கெளம்புரானுங்க..

            ஊருக்குள்ள சில பப்ளிக்குட்டி பைத்தியமெல்லாம் இருக்கும். தன்னோட பேரு வரணும்கிறதுக்காக எத வேனாலும் பண்ண ரெடியா இருக்கும். (பவர் ஸ்டார் ரசிகர்கள் அமைதி காக்க.. மேட்டர் அதில்ல வேற..!).
     ஆனா சீரியஸாவே சில பேர் இப்படியெல்லாம்  அலையிராங்க..  அதில ஒன்னு இன்னிக்கு பாத்தது.. 1/15/2013

 
        இப்போ டிஸ்கவெரி சேனல்ல ஒரு நிகழ்ச்சி பாத்தேன்.. அழிவுகளுக்கான அரசன்னு ஒரு ப்ரோக்ராம்.. அதுல ஒருத்தருக்கு அவார்ட் குடுத்தாங்க.. அவர் என்ன பண்ணிருந்தார்னா,
ஒரு மிக்ஸி கண்டு பிடிச்சிருந்தார்.. அந்த மிக்ஸில பேஸ் பால், ஐ பேட்- னு எல்லா பொருளையும் மாவாக்குனாறு, அதாவது ஒலியின் வேகத்துல பாதி ஸ்பீட்-ல அரைக்க வச்சாராம் கிட்டதட்ட 560 கிமீ வேகம்னு சொன்னதா ஞாபகம்.. இதுல என்ன கொடுமைனா கடைசியா அவருக்கு ஒரு அவார்ட் குடுத்தானுங்க, மனுசன் அதயும் போட்டு மிக்ஸில அரச்சுட்டான் அந்த பயபுல்ல.. ஏண்டா இப்பிடி..!

Wednesday, September 19, 2012

வெப்பேஜ் லோடாகாம வெறுப்பேத்துதா..!

                        நாம் எல்லோருக்கும் வெப் பேஜ் லோடாவது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.. ஒரு சில ப்ளாக்கர்ஸ், தங்களுக்கு தெரிஞ்ச எல்லா விட்ஜெட்டையும் ADD-பண்ணி , இம்சை அரசனா மாறி  இருப்பாங்க.. என்ன பண்றது படிக்கணும்னு தோணுமே..! ஒரு சில நேரங்களில் நாம் படிக்க வேண்டிய செய்தியை படிக்காமல் கூட விட்டு விட நேரிடும்.. இதனை தவிர்ப்பது எப்படி.. நான் விளக்க இருப்பது ஃபயர் ஃபாக்ஸில் உள்ள ஒரு குறுக்கு வழி மட்டுமே.. இதனை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது.. இண்டெர்னெட் இணைப்பு மெதுவாக உள்ள போதும், நாம் செய்தியை மட்டும் படிக்க தேவைப்படும் போதும், ஒரு சிலர் குறிப்பிட்ட கேபி எம்பி அளவுகளை பயன்படுத்துவதற்கும் இது மிகுந்த பலன் அளிக்கும்..

Saturday, March 26, 2011

எனக்கு இந்த அரசியலே பிடிக்காது.. அத தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ணப் போறேன்....

          இந்த வசனம் எல்லோரும் அதிகமா சொல்லுவாங்க.. ஆமா..
இத தெரிஞ்சு என்ன பிரயோஜனம்..

     ஏன்னா நமக்கு ஒரு விசயம் எப்ப முக்கியமா தெரியும்னா, அந்த விசயத்தால நாம
பாதிக்க படக்கூடாதுங்கிற எண்ணம் வருகிற போதுதான்..  இப்ப உதாரணமா
ஒரு விசயத்த எடுத்துப்போம்,
         நீங்க உங்களோட பைக்-கை உங்க நண்பர்-கிட்ட தரும்போது என்ன சொல்லி   கொடுப்பீங்க, பாத்துப் போடா இப்பதான் நிறைய செலவு பண்ணிருக்கேன்னு ஒரு    அக்கறையோட சொல்லுவீங்க, ஆனா...    


தேர்தல் வந்திருச்சு....

ஆரம்பமாயிடுச்சு, எல்லோரும் ஓட்டு வேட்டைக்கு கிளம்பி வந்துட்ருப்பாங்க,
மறக்காம ஓட்டுப் போடுங்க... சரி விஷயத்துக்கு வருவோம்..

இந்த தேர்தல்ல யார் ஜெயிக்கிறாங்களோ இல்லயோ, பரிதாபமா
தோற்கப் போவது தமிழ்நாட்டு மக்களான நாம தான்...

அது ஏங்க... இலவசம் லாம் குடுக்கப் போறாங்க, அப்புறம் என்ன
கவலைனு நினைக்கிறீங்களா.... ஒரு அருமையான் பழமொழி
இருக்குங்க.. “ மீன் குடுக்குறத விட, மீன் பிடிக்க கத்துக் குடுங்க,
அவனோட வாழ்க்கை முழுவதும் பயனுள்ளதா இருக்கும்”னு 


Wednesday, February 10, 2010