Saturday, March 26, 2011

எனக்கு இந்த அரசியலே பிடிக்காது.. அத தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ணப் போறேன்....

          இந்த வசனம் எல்லோரும் அதிகமா சொல்லுவாங்க.. ஆமா..
இத தெரிஞ்சு என்ன பிரயோஜனம்..

     ஏன்னா நமக்கு ஒரு விசயம் எப்ப முக்கியமா தெரியும்னா, அந்த விசயத்தால நாம
பாதிக்க படக்கூடாதுங்கிற எண்ணம் வருகிற போதுதான்..  இப்ப உதாரணமா
ஒரு விசயத்த எடுத்துப்போம்,
         நீங்க உங்களோட பைக்-கை உங்க நண்பர்-கிட்ட தரும்போது என்ன சொல்லி   கொடுப்பீங்க, பாத்துப் போடா இப்பதான் நிறைய செலவு பண்ணிருக்கேன்னு ஒரு    அக்கறையோட சொல்லுவீங்க, ஆனா...    

தேர்தல் வந்திருச்சு....

ஆரம்பமாயிடுச்சு, எல்லோரும் ஓட்டு வேட்டைக்கு கிளம்பி வந்துட்ருப்பாங்க,
மறக்காம ஓட்டுப் போடுங்க... சரி விஷயத்துக்கு வருவோம்..

இந்த தேர்தல்ல யார் ஜெயிக்கிறாங்களோ இல்லயோ, பரிதாபமா
தோற்கப் போவது தமிழ்நாட்டு மக்களான நாம தான்...

அது ஏங்க... இலவசம் லாம் குடுக்கப் போறாங்க, அப்புறம் என்ன
கவலைனு நினைக்கிறீங்களா.... ஒரு அருமையான் பழமொழி
இருக்குங்க.. “ மீன் குடுக்குறத விட, மீன் பிடிக்க கத்துக் குடுங்க,
அவனோட வாழ்க்கை முழுவதும் பயனுள்ளதா இருக்கும்”னு